இண்டர்நெட் இல்லாமல் மொபைல் டிவி.. மத்திய அரசு திட்டம்
live TV channels without data connection - உங்களுடைய மொபைல் போனில் இண்டர்நெட் இல்லாமல் நேரலையாக டிவி சேனல்களை பார்ப்பதற்கான தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
HIGHLIGHTS
உங்களுடைய மொபைல் போனில் இண்டர்நெட் இல்லாமல் நேரலையாக டிவி சேனல்களை பார்ப்பதற்கான தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இதுகுறித்து நன்கு அறிந்த அரசு அதிகாரிகள், தொலைத்தொடர்புத் துறை (DoT), தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) மற்றும் கான்பூர் ஐஐடி.,யுடன் இணைந்து விவரங்களை சேகரத்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டிடிஎச் முறையில், டேட்டா இணைப்பு இல்லாமல் மொபைல் போன்களில் டிவி சேனல்களை நேரடியாக ஒளிபரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் மத்திய ஆராய்ந்து வருகிறது. D2M (direct-to-mobile) என அறியப்படும் இந்த தொழில்நுட்பம், மொபைல் ஃபோன் பயனர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கேபிள் அல்லது DTH இணைப்பு மூலம் தங்கள் சாதனங்களில் டிவி பார்க்க அனுமதிக்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆனால், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் இந்த திட்டத்தை எதிர்ப்பார்கள். ஏனெனில் இது அவர்களின் டேட்டா வருவாயை பாதிக்கலாம். தற்போது 5G வணிகத்திற்கு சென்றுள்ள நிலையில் இந்த வருவாய் இழப்பு பெரிதாக பாதிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம், டெலிகாம் ஆபரேட்டர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் சந்தித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், பெயரை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து DoT, MIB, IIT- கான்பூர் அதிகாரிகளும், தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறைகளின் பிரதிநிதிகளும் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.