/* */

வில்லங்கமான ஆசை விபரீதத்தில் முடிந்தது; பெங்களூருவில் ஒரு 'பகீர்' சம்பவம்

பெங்களூருவில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த முன்னாள் அரசு அதிகாரி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது.

HIGHLIGHTS

வில்லங்கமான ஆசை விபரீதத்தில் முடிந்தது; பெங்களூருவில் ஒரு பகீர் சம்பவம்
X

பெங்களூருவில் முதியவரின் உயிரை ‘பலி’வாங்கிய கள்ளக்காதல் ( கோப்பு படம்)

பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு முன்பு, பிளாஸ்டிக் பையில் 67 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜே.பி.நகர் புத்தேனஹள்ளியில் வசித்து வந்த பாலசுப்ரமணியன் என்பவரது சடலம் எனத் தெரிய வந்தது.

பாலசுப்ரமணியன் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர், கடந்த நவம்பர் 16-ம் தேதி தனது பேரனை பேட்மிண்டன் வகுப்புக்கு விடுவதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் மாலை 4.55 மணியளவில், பாலசுப்ரமணியன் தனது மருமகளுக்கு போன் செய்து, 'தனிப்பட்ட வேலை இருப்பதால் தான் வர தாமதமாகும்' என்று தெரிவித்துள்ளார். அதுவே பாலசுப்பிரமணியனின் கடைசி அழைப்பாக இருந்தது. அதன்பிறகு பாலசுப்ரமணியன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், போலீசில் புகார் கொடுத்ததும் தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாலசுப்ரமணியன் வீட்டில் வேலை செய்த 35 வயதான பெண் திடீரென மாயமானது போலீஸ் கவனத்துக்கு வந்தது. அவரை தேடிப் பிடித்த போலீசார் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 65 வயதான பாலசுப்பிரமணியனுக்கு, வேலைக்காரப் பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி வேலைக்காரப் பெண் வீட்டுக்கு செல்லும் பாலசுப்ரமணியன் அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு வருவது வழக்கம். வேலைக்காரப் பெண்ணுக்கு, கணவன் இருப்பதால் அவர் இல்லாத நேரத்தில் இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அன்று வீட்டில் இருந்து புறப்பட்ட பாலசுப்ரமணியன், பேரனை கோச்சிங் சென்டரில் விட்டுவிட்டு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பாலசுப்ரமணியனனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, மாரடைப்பால் கட்டிலிலேயே இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேலைக்காரப் பெண், 'விஷயம் வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும்' என பயந்து, தனது கணவன், சகோதரர் உதவியுடன் பாலசுப்ரமணியனனின் சடலத்தை பெட்ஷீட்டில் மூடி பிளாஸ்டிக் கவரில் சுற்றி எடுத்து வந்து, புதருக்குள் வீசியது தெரிய வந்தது.

இதனை உறுதி செய்த போலீசார், வேலைக்காரப் பெண் அவரது கணவர் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கு கடந்த ஆண்டு 'ஆஞ்சியோபிளாஸ்டி' அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

தனது மோசமான உடல்நிலையை, முதுமையை பொருட்படுத்தாமல், 67 வயதில் கள்ளக்காதலி வேலைக்காரப் பெண்ணுடன் ஓவராக 'கொண்டாட்டம்' போட்டதன் விளைவாக, முதியவர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் உறுதியானது.

குடும்ப வாழ்க்கையில், தாம்பத்தியம் மிக அவசியமானதுதான். அது புனிதமானதும் கூட. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, இல்லற ஆசைகளை மறந்துவிட்டு ஆன்மீக நாட்டத்தில் மனதைச் செலுத்துவதே வாழ்க்கைக்கு நிம்மதி, அமைதியை தரும். ஆனால், முதுமையில் தள்ளாடும் நிலையிலும் இதுபோன்ற வில்லங்க ஆசைகளை மனிதன் கொண்டிருந்தால், அவனது இறுதி மறைவு கூட விபரீதமாக மாறிவிடும் என்பதையே இந்த 'பகீர்' சம்பவம் பாடமாக உணர்த்துகிறது.

Updated On: 27 Nov 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு