/* */

ஓட்டு ஒரு கட்சிக்கு; லைட் எரியுது இன்னொரு கட்சிக்கு - விருதுநகரில் குழப்பம்

விருதுநகரில் ஓட்டு போடுவது ஒரு கட்சிக்கு ஆனால், லைட் எரியறதோ வேற கட்சிக்கு என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.

HIGHLIGHTS

ஓட்டு ஒரு கட்சிக்கு; லைட் எரியுது இன்னொரு கட்சிக்கு - விருதுநகரில் குழப்பம்
X

தி.மு.க.வுக்கு பட்டனை அழுத்தினால் பி.ஜே.பி.க்கு வாக்கு பதிவாவதாக வாக்காளர்கள் புகார்.

விருதுநகர் நீராவி தெருவை சேர்ந்த குணசேகரன் என்ற வாக்காளர் விருதுநகர் சத்திரிய பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்தார். அப்போது அவர் தான் (1) வது பட்டனை அழுத்தியதாகவும் ஆனால், இரண்டாவது பட்டனில் லைட் எரிந்ததுடன் அந்த வாக்கு தாமரை சின்னத்தில் பதிவானதாகவும் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.

விருதுநகர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வாக்கு பதிவு செய்து சோதனை செய்து பார்க்கலாம் என்று கூறினார். தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். -அவர்கள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2021 4:39 AM GMT

Related News