Begin typing your search above and press return to search.
விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பாண்டியன் துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இன்சென்டிவ் குளறுபடிகள் செய்யாதே, ஒப்பந்தப்படி இன்சென்டிவ் வழங்கிட வேண்டும், பேட்டா பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோசங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள், உறுப்பினர்கள், போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் நிறைவுரையாற்றினார்.