/* */

வீட்டில் பதுக்கிய பட்டாசால் வெடிவிபத்து: இருவர் காயம்; நால்வர் மாயம்

சிவகாசியில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில், இருவர் காயமடைந்தனர்; மேலும் நான்கு பேரை காணவில்லை.

HIGHLIGHTS

வீட்டில் பதுக்கிய பட்டாசால் வெடிவிபத்து: இருவர் காயம்; நால்வர் மாயம்
X

பட்டாசு வெடி விபத்தில்,  தரைமட்டமான வீட்டை தொலைவில் இருந்து பார்க்கும் அப்பகுதி மக்கள். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி- ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் உள்ள நேருஜி நகரில், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ராமநாதன் என்பவர், தனது சொந்த வீட்டில் குழாய் கம்பெனி நடத்தி வந்துள்ளார். சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அவரது வீட்டில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், மொத்த கட்டிடமும் தரைமட்டமானது. இவ்விபத்தில், வேல்முருகன் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்து, சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சவர்ணம், கார்த்தீஸ்வரன், சமீதா உள்ளிட்ட நால்வரைக் காணாத நிலையில், தொடர்ந்து அங்கே வெடித்துக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும், தேடுதலில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குழாய் கம்பெனி உரிமையாளர் ராமநாதன் தப்பி ஓடிவிட்டதாக, சிவகாசி கிழக்கு காவல்துறையினர் தரப்பில் கூறப்படும் நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!