Begin typing your search above and press return to search.
முப்படை தளபதி மறைவுக்கு விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சினர் மலர் தூவி மரியாதை
முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13ஆயுத படை வீரர்கள் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் அஞ்சலி.
HIGHLIGHTS
பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13ஆயுத படை வீரர்கள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமான விபத்து நடந்தது.
இந்த விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .
அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது