/* */

தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவு தினம்: பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவுதினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவு தினம்: பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை
X

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு என பெயர் வர உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் விருதுநகரில் உள்ளது. விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினர், இயக்கத்தினர் தியாகி சங்கரலிங்கனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடார் மஹாஜனம் சார்பில் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து விருதுநகர் சுமை பணியாளர்கள் சங்கத்தினர் திருஉருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மேலும் நாடார் மஹாஜனம் சார்பில் மணி மண்டபத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினர்.

Updated On: 13 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு