/* */

காணாமல் போன 120 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

விருதுநகரில் கடந்த 6 மாதங்களில் காணாமல் போன 120 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்.

HIGHLIGHTS

காணாமல் போன 120 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு
X

விருதுநகரில் கடந்த 6 மாதங்களில் காணாமல் போன 120 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் ஆண்ட்ராய்ட் மொபைல்கள் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 21 லட்சம் மதிப்பிலான 120 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் இன்று ஒப்படைத்தார்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் மொபைல் போன்கள் காணாமல் போவதாக தொடர்ந்து மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார்கள் வந்த நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட சைபர் கிரைம் தலைமையில் கடந்த 6 மாதங்களில் மொபைல் போன்கள் காணாமல் போனதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

இதில் காணாமல் போன இருபத்தி ஒரு லட்சம் மதிப்புள்ள 120 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் போனில் உரிமையாளர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். மேலும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 30 Nov 2021 12:40 PM GMT

Related News