Begin typing your search above and press return to search.
அரசு பேருந்திற்குள் பெய்த கனமழை: குடை பிடித்து பயணிகள் அவதி
ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசுப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்.
HIGHLIGHTS
ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசுப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது .இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் மேகம் இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்பட்டது.
இந்நிலையில் மாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் to கான்சாபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பேருந்தில் சென்ற பயணிகள் குடை பிடித்தவாறே சென்றனர்.