திருவில்லிபுத்தூரில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
POCSO Act Punishment Tamil- திருவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
HIGHLIGHTS
POCSO Act Punishment Tamil- திருவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள பண்டிதன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீராச்சாமி (25) என்பவர், தினமும் பள்ளி செல்லும் மாணவியை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை பலசுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், பள்ளி மாணவியை மிரட்டிய வீராச்சாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2