/* */

காரியாபட்டி நூலகத்தில் உலக புத்தக தினவிழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை

HIGHLIGHTS

காரியாபட்டி நூலகத்தில் உலக புத்தக தினவிழா
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி திருச்சுழி கிளை நூலகத்தில் நடைபெற்ற உலக புத்தக தின விழாவுக்கு திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும் செல்வலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியைரமாபிரபா முன்னிலை வகித்தார். இருவரும் புத்தக வாசிப்பு பற்றியும், நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். 'நூலகத்தின் பயன்பாடு' பற்றி மாணவிகள் நந்தினி, காவ்யா மற்றும் மாணவர் விஷால் ஆகியோர், பேசினர்.இவர்கள் மூன்று பேருக்கும் நூலகர் பாஸ்கரன் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

திருச்சுழி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஃபாத்திமா உதவியுடன், இந்நிகழ்ச்சியை நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தர்.அழகேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில், நூலகப் பணியாளர்கள் பாண்டிதேவி, குமார், மஞ்சுளா மற்றும் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். .இதன் தொடர்ச்சியாக, நூலகத்தில் மாணவ,மாணவிகள் பங்களிப்புடன் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

Updated On: 24 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  2. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  3. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ரூ.5.48 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
  6. டாக்டர் சார்
    கரு உள்வைப்பு என்றால் என்ன? வாங்க தெரிந்து கொள்வோம்!
  7. கல்வி
    எளிய குறள் அறிவோம் எல்லோரும் வாங்க..!
  8. பூந்தமல்லி
    காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
  9. தமிழ்நாடு
    தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
  10. நாமக்கல்
    மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர்...