/* */

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து

இடி,மழையால் சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ  விபத்து
X

சிவகாசியில் இடிமழையால் தீ பிடித்த பட்டாசு ஆலையை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் தீ அணைப்பு வீரர்கள்.

சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கீழு பெத்துல் பட்டியில் சண்முக நாதன் என்பவருக்கு சொந்தமான கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால், ஆலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட இடி,மின்னல் காரணமாக பட்டாசு தயரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைத்துள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.


சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.விபத்தில் ஒரு அறை மற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மூலப்பொருட்கள் எரிந்து சேதமானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 May 2021 10:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  5. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  6. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  8. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  9. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...