/* */

போக்ஸோ வழக்கில் வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

அருப்புக்கோட்டை வாலிபருக்கு போக்ஸோ வழக்கில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

போக்ஸோ வழக்கில் வாலிபருக்கு  22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
X

பைல் படம்

அருப்புக்கோட்டை வாலிபருக்கு போக்ஸோ வழக்கில், 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார் (20). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை மிரட்டி கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார், மகேஸ்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரணஜெய ஆனந்த், சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றவாளி மகேஸ்குமாருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 29 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?