Begin typing your search above and press return to search.
ஆடி மாத கடைசி நாள்: சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ஆடிமாத கடைசி நாளில் சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத கடைசி தினத்தையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனையடுத்து கோவில் முன்பு கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அம்மனை வழிபாடு செய்தனர்.