/* */

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

HIGHLIGHTS

சிவகாசி  பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
X

சிவகாசி அருகே சதானந்தபுரத்தில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 15ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 16ம் தேதி ஆதிலட்சுமி என்ற பெண் தொழிலாளி பலியானார். படுகாயத்துடன் மேல்சிகிச்சைக்காக செந்தி, முத்துமாரி சுந்தரபாண்டி ஆகியோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் சுந்தரபாண்டி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது .மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட 8 பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 April 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்