/* */

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
X

சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் காலமுறை ஊதியம் வழங்க காேரி துாய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு காெடுத்தனர்.

சிவகாசி யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் சிவகாசி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாரணாபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறோம். மேற்கண்ட தூய்மை பணியாளர்கள் அனைவரும் 2013-ல் நாரணாபுரம் கிராம பஞ்சாயத்தில் தூய்மை பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டது முதல் எங்களுக்கு சேவை பதிவேடு வழங்கப்பட்டு தொகுப்பூதியம் பெற்று வந்தோம்.

தற்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி கடந்த 1-10-2017 முதல் ரூ. 3700 பெற்றோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வின்படி மாத ஊதியமாக ரூ.4,100 பெற்று வருகிறோம்.

ஆகவே அரசாணை 129-ன் படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் நாரணாபுரம் பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உரிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!