/* */

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
X

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை மீன் வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் கலந்து கொள்ள 360 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு சுற்றிலும் 40 காளைகளும், 25 வீரர்களும் களத்தில் இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சிறந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பள்ளபட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 30 May 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்