/* */

சிவகாசி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிவகாசி அருகே மனைவியை கொடூரமாக தாக்கிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

சிவகாசி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
X

சிவகாசி அருகே மனைவியை கொடூரமாக தாக்கிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (35). இவரது மனைவி காளீஸ்வரி (30). கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முத்துப்பாண்டி, தனது மனைவி காளீஸ்வரியை கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தினார்.

திருத்தங்கல் காவல் நிலையத்தில் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், குற்றவாளி முத்துப்பாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மனைவியை கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்ற கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 22 Sep 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!