/* */

ஹீலியம் பலூன் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு

ஹீலியம் பலூன் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு
X

சிவகாசி பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஹூலியம் பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகாசி பேருந்து நிலையத்தில் ஹூலியம் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் கண்ணன் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை, எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ஹூலியம் பலூனை பறக்கவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

Updated On: 26 March 2021 9:34 AM GMT

Related News