/* */

மதுரை, சிவகாசி பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

HIGHLIGHTS

மதுரை, சிவகாசி பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
X

சிவகாசி பகுதியில்  பெய்த மழை

சிவகாசி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.சிவகாசி பகுதியில், கடந்த சில நாட்களாக கோடை காலம் போல கடுமையான வெயில் இருந்து வருகிறது. இரண்டு நாட்களாக வெயில் குறைந்து, குளிர்ந்த காற்றும், அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கமான வெயில் சுட்டெரித்தது. வெப்பம் அதிகரித்த நிலையில், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

மாலை நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென்று மேகங்கள் திரண்டுவந்து பலத்த மழையாக பெய்யத் துவங்கியது. அம்மன் நகர், செல்லையநாயக்கன்பட்டி, நாரணாபுரம், சிவகாமிபுரம், சேர்மா நகர், ஆர்.ஆர்.நகர், அனுப்பன்குளம், மேட்டமலை உட்பட பல இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக வெட்கை குறைந்து, இதமான சூழல் ஏற்பட்டது. சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல், மதுரை நகரில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுரை அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், கருப்பாயூரணி, கோரிப்பாளையம் பகுதிகளில் மழை பெய்தது.

Updated On: 19 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  2. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  4. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  5. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  6. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  7. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  8. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  9. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  10. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!