/* */

சிவகாசியில் நட்சத்திர ஆமையை விற்க முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்

நட்சத்திர ஆமையை விற்க முயன்ற 4 பேரிடமும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிவகாசியில்   நட்சத்திர ஆமையை விற்க முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டனர்
X

விருதுநகர் மாவட்டம்,சிவகாசியில் நட்சத்திர ஆமையை விற்க முயன்ற 4 பேர் பிடிபட்டனர்

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பிரஷாந்த் ( 23), மகேந்திரன் (23) ஆகிய 2 பேரும் நட்சத்திர ஆமையைக் கொண்டு வந்து சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் கேரளாவைச் சேர்ந்த அபிஷேக் (23) நிதின் (20) ஆகியோரிடம் விற்பனை செய்ய பேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 4 பேரையும் பிடித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் நட்சத்திர ஆமையை பறிமுதல் செய்து சிவகாசி வனச்சரக பொறுப்பு அலுவலர் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.நட்சத்திர ஆமையை விற்க முயன்ற 4 பேரிடமும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On: 18 July 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...