/* */

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் சேதம்

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன

HIGHLIGHTS

சிவகாசி அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் சேதம்
X

பட்டாசு ஆலையில் நேரிட்ட  வெடி விபத்தில் சேதமடைந்த 3 அறைகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, வேலாயுதம் ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பாவநாசம் (41). இவர், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. 2 நாட்களாக பட்டாசு ஆலையில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் பூட்டிக்கிடந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை 6 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

மருந்து கலவை செய்யும் அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப் பொருட்கள், ரசாயன மாற்றம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், பட்டாசு மருந்து கலவை அறை முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அருகில் இருந்த 2 அறைகளும் இடிந்து சேதமானது. விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மற்ற அறைகளில் தீப்பிடிக்காத வகையில் தீயை கட்டுப்படுத்தி அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் நல் வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 May 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு