Begin typing your search above and press return to search.
காரியாபட்டியில் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
Financial assistance to the police family in Kariyapatti
HIGHLIGHTS
காரியாபட்டியில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் சார்பில் குடும்பநல நிதி உதவி வழங்கப்பட்டது
காரியாபட்டியில், காவலர் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை 2002 உதவும் உறவுகள் சார்பாக, பணியின்போது இறந்துபோன காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி காரியாபட்டியில் நடைபெற்றது. காரியாபட்டியை சேர்ந்த மறைந்த காவலர் சின்னராஜா குடும்பத்தாருக்கும், பாலுமகேந்திரா குடும்பத்தாருக்கும். ராஜேந்திரன் குடும்பத்தாருக்கு மொத்தம் 48 லட்சத்து 61 ஆயிரத்து 220 ரூபா தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை 2002 பேட்ஜ் காவலர்கள் செய்திருந்தனர்.