/* */

சிவகாசி அருகே மின் கம்பம் உடைந்து மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு

திருத்தங்கல் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கும் பணியின்போது மின் கம்பம் உடைந்து விழுந்து மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

சிவகாசி அருகே மின் கம்பம் உடைந்து மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு
X

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்காெண்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் புதியதாக மின் இணைப்பு கொடுக்கும் பணியின்போது மின் கம்பம் உடைந்து விழுந்து மின் வாரிய ஊழியர் பலி. ஒருவர் காயம்.

சிவகாசி திருத்தங்கல் அருகே உள்ளது கண்ணன் காலனி. இந்தப் பகுதியில் புதியதாக மின்சார இணைப்பு கொடுப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் காளிராஜ் முருகேசன் இருவரும் புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பம் உடைந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியர் காளிராஜ் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முருகேசன் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்தங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி