/* */

தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்ற காரியாபட்டி நூலாசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு

District Collector praises the author of the book in Kariyapatti

HIGHLIGHTS

தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்ற காரியாபட்டி   நூலாசிரியருக்கு  ஆட்சியர் பாராட்டு
X

காரியாபட்டி மண்ணின் பெருமை நூலாசிரியர் பரதனுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

காரியாபட்டி மண்ணின் பெருமை நூலாசிரியர் பரதனுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மனுநூல் நிலைய நிறுவனர் பரதன். இவர், தமிழக அரசு புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தனது ஓய்வுக்கு பிறகு, தன்னுடைய இல்லத்தை மனுநூல் நிலையம் என்ற பெயரில் நூலகம் நடத்தி வருகிறார். மேலும், நூலகம் சார்பாக, யோகா பயிற்சி, சிலம்பாட்டம், கேரம் பயிற்சி, இலவச தையல் பயிற்சி, தேவாரம் திருவாசகம் பாடல் பயிற்சி, ஏழை மாணவர்ககளுக்கு கல்வி உதவிதொகை வழங்கல்,

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தளவாடங்கள்,கல்வி. உபகரணங்கள் வழங்குதல் போன்ற சமூக பணிகளையும் செய்து வருகிறார். காரியாபட்டி வட்டாரத்தில், கிராமங்கள் எவ்வாறு உருவானது. கிராம பெயர்கள் வரக்காரணங்கள், வாழ்ந்து மறைந்த தியாகிகளில் வரலாறுகள் மண்ணின் தன்மை, விவசாய தொழில் வளர்ச்சி பற்றி விவரங்களை கிராம கிராமாக சென்று சேகரித்து காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை என்ற நூலை எழுதினார்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை "காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை" நூலை சிறந்த நூலாக தேர்வு செய்தது. இதற்கான விருதினை நூலாசிரியர் பரதனுக்கு தமிழ் வளர்ச்சி - தமிழ் பண்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விருது வழங்கி பாராட்டினார். விருது பெற்ற நூலாசிரியர் பரதனுக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 18 Jun 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து