/* */

விருதுநகர் அருகே வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகரில் வேனில் கடத்திச்சென்ற ஆயிரத்து, 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

விருதுநகர் அருகே வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
X

விருதுநகரில் வேனில் கடத்திச்சென்ற ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

விருதுநகரில், வேனில் கடத்திச்சென்ற ஆயிரத்து, 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை விருதுநகர் - வடமலைக்குறிச்சி சாலையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். வேனுக்குள் ஆயிரத்து, 500 கிலோ ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ரேசன் அரிசி மூடைகள் கடத்தி வந்த விருதுநகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தல் ரேசன் அரிசி மூடைகளை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 15 July 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...