/* */

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

HIGHLIGHTS

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு
X

விருதுநகர் அருகே சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த உரிமையாளர் மீது வழக்கு..

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள நாட்டார்மங்களம் பகுதியில், ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்ற காரணங்களால், கடந்த ஏப்ரல் மாதம் வருவாய்த்துறை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் பட்டாசு ஆலை கண்காணிப்பு சிறப்பு தாசில்தார் பொன்ராஜ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துணை இயக்குனர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பட்டாசு ஆலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கூறி அதிகாரிகள் அந்த ஆலை மீது நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களை ஆலையை விட்டு வெளியேற்றினர். ஆலை உரிமையாளர் ராவணன் மீது, ஆமத்தூர் காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 July 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...