/* */

ஊரடங்கு: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடல்

ஊரடங்கு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டது

HIGHLIGHTS

ஊரடங்கு:  விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடல்
X

விருதுநகர் மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டாசு தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர் . இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் கொரோனோ வைரஸ் தொற்று மக்களிடையே 2வது அதிவேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. பட்டாசு உற்பத்தியை மேற்கொண்டால் தொழிலாளர்களுடைய கொரோனோ தொற்று பரவும் அச்சம் நிலவுவதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்திலுள்ள 1100 பட்டாசு ஆலைகளையும் மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டு இன்று முதல் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமுடக்க தளர்வுகளுக்கு பின்னர் பட்டாசு உற்பத்தி தொடங்கப்படும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 10 May 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்