/* */

சிவகாசி அருகே 2 வயது குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழப்பு

சிவகாசி அருகே 2 வயது குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்தது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே 2 வயது குழந்தை விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழப்பு
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (27). இவர் சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி (2) என்ற பெண் குழந்தை இருந்தது. ஜனனிக்கு பிறந்தது முதல் உடல்நலக் குறைபாடு இருந்து வந்தது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஜனனி, தவறி கிழே விழுந்தாள். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவளை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனலிக்காமல் குழந்தை ஜனனி, பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து மாரனேரி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Aug 2022 9:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  4. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  5. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  7. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  8. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  9. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  10. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!