/* */

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

6 பேர் பலி 16 பேர் படுகாயம்

HIGHLIGHTS

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
X

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து 6 பேர் பலி 16 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலை உள்ளது இந்த பட்டாசு ஆலை நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு மையத்தின் உரிமத்தில் செயல் படுகிறது. இன்று மாலை பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தில் 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 16 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 80℅ தீ காயத்துடன் இரண்டுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Updated On: 25 Feb 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  5. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  6. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  7. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  9. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  10. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!