Begin typing your search above and press return to search.
உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: சிவகாசி மாணவர் நூதன கோரிக்கை
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று சிவகாசி மாணவர் நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் பொறியியல் மாணவன் பிரவீன். இந்தியாவின் அதிக நீளமான நாக்கு உடையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 10.8 செமீ நீளம் நாக்கை கொண்ட மாணவர் பிரவீன் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்&ரஷ்யா போரை நிறுத்தி அமைதியான சூழலை உருவாக்க வலியுறுத்தும் விதமாகவும், போரால் உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு வர வலியுறுத்தியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தை தனது நாக்கால் ஓவியமாக வரைந்து வலியுறுத்தியுள்ளார். மாணவன் பிரவீன் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 208 அடி கொண்ட தேசிய கொடியை நாக்கால் வரைந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.