/* */

சிவகாசி வட்டாரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திடீர் சாரல்மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

சிவகாசி வட்டாரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சாரல் மழை பெய்த காட்சி 

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. வழக்கமான கோடைக் காலங்களை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருப்பதால், மதிய நேர வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் இன்று காலையும் வழக்கம் போல வெயில் மிக கடுமையாக இருந்தது. பிற்பகலில் திடீரென்று மேகங்கள் திரண்டு வந்து குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பரவலாக சாரல்மழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் சாரல் மழையும், அவ்வப்போது சற்று பரவலாக பலத்த மழையும் பெய்தது. திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. வெய்யிலின் தாக்கத்தை மழை குறையச் செய்ததால், மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 28 May 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!