திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞருக்கு சிறை

திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து சார்பு ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞருக்கு சிறை
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் கடந்த 2022ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் தர்மராஜன், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த வெங்கடேஷனை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வெங்கடேஷ், சார்பு ஆய்வாளர் தர்மராஜனை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து சார்பு ஆய்வாளர் தர்மராஜன், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, சார்பு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி வெங்கடேசனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 1 Jun 2023 7:08 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா