/* */

இராஜபாளையம் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வழங்காத இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இராஜபாளையம்  நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X

இராஜபாளையத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 30வது வார்டு பகுதியை சேர்ந்த தோப்புபட்டி பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனவும், பலமுறை நகராட்சியில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இன்று சங்கரன்கோவில் விலக்கு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவலறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் நகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர். பின்னர் அப்பகுதியில் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நகரின் முக்கிய சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 10 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...