/* */

இராசபாளையம் அருகே டிராக்டர் ஓட்டுநர் வெட்டிக் கொலை: இருவர் கைது

இராசபாளையம் அருகே டிராக்டர் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (21). இவர் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் செங்கல் சூளையில், டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

ராஜ்குமாருக்கு, மாடசாமி சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளார். ராஜ்குமார் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தருமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். நேற்றும் மாடசாமியிடம் தனக்கு தர வேண்டிய பணம் குறித்து ராஜ்குமார் கேட்டுள்ளார்

. அப்போது அங்கிருந்த மாடசாமியின் உறவினர்களான கணேஷ்குமார் (28), இவரது தம்பி ஆனந்தகுமார் (26) இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த சேத்தூர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணேஷ்குமார், ஆனந்தகுமார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 May 2022 3:52 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  2. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  3. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  5. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  6. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  7. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  8. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  9. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  10. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை