/* */

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன், மனைவி

ராஜபாளையத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அம்பேத்கர் நகர் காலனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து.

HIGHLIGHTS

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன், மனைவி
X

ராஜபாளையம் அம்பேத்கர் நகர் காலனி பகுதியில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

ராஜபாளையம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக அம்பேத்கர் நகர் காலனி பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விபத்து. மேலும் அப்பகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. மேலும் இன்று மாலை நேரத்தில் பெய்த மழையினால் அம்பேத்கர் நகர் காலனி பகுதியில் வசித்து வரும் சேவகன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. மேலும் அதிர்ஷ்டவசமாக கணவன் சேவகன், மனைவி அகிலா இருவரும் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் தப்பினர்.

மேலும் மழை பரவலாக பெய்து வருவதால் அம்பேத்கர் நகர் பகுதி முழுவதும் மழைநீர் ஆங்காங்கே தேங்கியும், வீட்டுக்குள் உட்புகும் நிலை உள்ளது. மேலும் இந்தப் பகுதி அவல நிலைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் மேலும் மழை காரணமாக இந்த வீட்டினை சீரமைத்து தருமாறும் நிவாரணம் வழங்கக்கோரியும் பாதிக்கப்பட்ட தம்பதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Updated On: 26 Nov 2021 2:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  5. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  6. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  7. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  8. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  9. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  10. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!