/* */

தேங்கி நிற்கும் கழிவுநீர்; சீரமைக்க மக்கள் கோரிக்கை

ராஜபாளையத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேங்கி நிற்கும் கழிவுநீர்; சீரமைக்க மக்கள் கோரிக்கை
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மதுரைராஜா கடைத்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ஆதலால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மருத்துவமனை, கோவில் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் இந்த வழியாக தினமும் எண்ணற்ற மக்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதேபோல், ராஜபாளையத்தில் உள்ள அனைத்து தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட போது சேதமடைந்தது. அதனை சரி செய்யாமல் விட்டதால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

எனவே கால்வாயை சீரமைத்து கழிவுநீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை