Begin typing your search above and press return to search.
இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணை: மாவட்ட ஆட்சியர் திறப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தாகோவில் அணை முழு கொள்ளளவை எட்டியதால் தற்போது பாசனத்துக்கு திறக்கப்பட்டது
HIGHLIGHTS

இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் அணையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், சாஸ்தா கோவில் அணையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சட்டமன்ற உருப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் விவசாய பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.