/* */

மழையால் பாதித்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்

இராஜபாளையம் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.3 லட்ச மதிப்பிலான நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

HIGHLIGHTS

மழையால் பாதித்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்
X

இராஜபாளையம் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.3 லட்ச மதிப்பிலான நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்கினார்.

இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பருவ மழையின் போது வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பருவ மழையின் போது வீடுகள் இடிந்து மற்றும் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்தது என வட்டாச்சியர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாச்சியர் தலைமையில் வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட இடந்தை பார்வையிட்டனர்.

120 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் முதற்கட்டமாக அரிசி பருப்பு போர்வை பாய் மற்றும் தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவிகளை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்குவதற்கு முன் வந்து அவருடைய சொந்த பணத்தில் 3 லட்ச ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்களை 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்