/* */

ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு

ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு
X

நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள பெரியகுளம் நகர குளம் வாண்டையார் குளம் கண்மாய் பாசனத்திற்கு உட்பட்ட விவசாய நிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய யார்ஸ் புயலால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து சேதமடைந்தது.

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஆட்சியர் கண்ணன் உத்தரவின் படி சேதமான பயிர்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( அக்ரி ) சங்கரநாராயணன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வேளாண் அலுவலர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 Jun 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?