/* */

ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் பலி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் பலி!
X

பலியான தொழிலாளி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 50). இவர் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் .

வழக்கம்போல், பணிக்கு வந்த இவர் பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு கைகால்களை சுத்தம் செய்வதற்காக அங்கு இருந்த தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்பொழுது, மின்சாரம் தாக்கியதில் சீதாராமன் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்தில் பலியானார்.

பலியான சீதாராமன் உடலை அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தளவாய்புரம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்..

Updated On: 29 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  2. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  4. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  5. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  6. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  7. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  9. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...