/* */

இராசபாளையம் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு

இராசபாளையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

இராசபாளையம் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு
X

அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி. 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் தங்கும் விடுதியும் உள்ளது.

இந்த பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சரிடம், சுந்தரராஜபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் செயல்படக்கூடிய இந்த பள்ளியை மேம்படுத்த வேண்டும். கட்டிடங்கள் புதிதாக கட்டி தரவேண்டும்.

மேலும், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் ,10 ஆசிரியகள் பணியாற்றக் கூடிய இடத்தில் ஐந்து ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஆகையால், உடனடியாக காலிபணியிடங்களை நிரப்பி, மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆய்வின் போது, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் துரை கற்பகராஜ் மற்றும் ஒன்றிய கழகச நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?