/* */

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் நாட்டுவெடிகுண்டு பறிமுதல்: ஒருவர் கைது

நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது

HIGHLIGHTS

இராஜபாளையம் அருகே  சுந்தரராஜபுரத்தில் நாட்டுவெடிகுண்டு பறிமுதல்:  ஒருவர் கைது
X

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்சாமி மகன் குருசாமி( 65 ) . இவர் சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தன்னிச்சையாக நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்திற்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார், குருசாமி காட்டில் சோதனை செய்தபோது 9 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் மற்றும் கைது செய்து வன விலங்கு எதுவும் வேட்டையாடப்பட்டுள்ளதா என்பது குறித்தும், சேத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Oct 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்