/* */

இராசபாளையம் அருகே சாராய ஊறல் அழிப்பு

இராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக்கடைகள் மூடப்பட்ட நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட முயற்சி. 200 லிட்டர் சாரய ஊறல் அழிப்பு

HIGHLIGHTS

இராசபாளையம் அருகே சாராய ஊறல் அழிப்பு
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப் பகுதியில் ஊறல் போட்டு வைத்திருந்த 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் சேத்தூர் காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

இராஜபாளையம் அடுத்துள்ள சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் காசிபாண்டியன் (வயது 44) கள்ளச்சாராயம் விற்பனைக்காக சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இரண்டு பேரல்களில் சாராய ஊறல் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடுத்து எஸ் ஐ மகாலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 200 லிட்டரை ஊறலை அழித்தார். மேலும் பயன்படுத்திய சில பொருட்களை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற காசிபாண்டியனை தேடிவருகின்றனர் .

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடி சென்று வருகின்றனர் . விற்பனைக்காக இதுபோன்ற அங்கங்கே ஊறல் போட்டு கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 1 Jun 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?