/* */

சிவகாசியில் அச்சக நிறுவனத்தில் தீ விபத்து

fire broke out at a printing plant in Sivakasi

HIGHLIGHTS

சிவகாசியில்  அச்சக நிறுவனத்தில் தீ விபத்து
X

சிவகாசியில் உள்ள அச்சக நிறுவனத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஜெனரேட்டர் எந்திரம் எரிந்து சேதமடைந்தது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி - திருத்தங்கல் சாலையில் உள்ள காரனேசன் காலனி பகுதியில், சுதர்சன் என்பவருக்கு சொந்தமான அச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்தப்பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டதால், அச்சகத்தில் இருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. மின்சாரம் வந்தவுடன் ஜெனரேட்டரை நிறுத்த முயன்றபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஜெனரேட்டர் தீப்பிடித்து எரியத் துவங்கியது. உடனடியாக, சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஜெனரேட்டர் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமானது.விபத்து குறித்து, சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தீ விபத்து ஏற்பட்ட அச்சகத்தின் பின் பகுதியில், பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 3 July 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்