/* */

இராஜபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்து 8 பேர் காயம்: பொதுமக்கள் பீதி

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் வெறி பிடித்து அப்பகுதி மக்களை கடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

இராஜபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்து 8 பேர் காயம்: பொதுமக்கள் பீதி
X

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் ஒன்று ரோட்டில் சென்ற பொது மக்களை விரட்டி விரட்டி கடித்ததில் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் வெறி பிடித்து அப்பகுதி மக்களை கடித்ததில் 8 பேர் காயம். நகராட்சி நிர்வாகம் தெருநாய் களுக்கு வெறிநோய் தடுப்பூசி பல ஆண்டுகளாக அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டு .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பலர் வளர்ப்பு பிராணிகளாக நாய்கள் வளர்க்கின்றனர். சிலர் சரியான கண்காணிப்பு இல்லாமல் நாய்களை தெருக்களில் சுற்ற விடுகின்றனர். தற்போது நகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுவதுடன், வாகன ஒட்டிகள் நாய்களால் விபத்துகளில் சிக்குகின்றனர்.

இந்நிலையில் இன்று இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் ஒன்று ரோட்டில் சென்ற பொது மக்களை விரட்டி விரட்டி கடிக்க துவங்கியது. இந்த வெறிநாய் கடியில் ஒரே குடும்பத்தில் தாய் மகன் உட்பட 8 பேர் காயமடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, இராஜபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், இதனை கட்டுபடுத்தும் நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக தடுப்பூசி செலுத்த எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தெரு நாய்கள் வெறி பிடித்து மக்களை கடித்து வருகின்றது என தெரிவித்தனர். மேலும் சில நாய்கள் நோய் ஏற்பட்டு நோய் பரப்பும் விதமாக சுற்றி வருவதாக பொதுமக்கள் குற்றசாட்டு கூறுகின்றனர்.

Updated On: 5 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!