/* */

கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின் பற்றாத கடைகளை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில்

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின் பற்றாத கடைகளை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.
X

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின் பற்றாத 4 பலசரக்கு கடைகளை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள், கடையின் உரிமையாளர்களுக்கு ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ராஜபாளையத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் காந்தி சிலை அருகே இருந்த தனியார் சந்தையில் பலசரக்கு, பழக்கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதிலும் கூட்ட நெரிசலை தடுக்க பழக் கடைகளை, முறை வைத்து ஒருநாள் விட்டு ஒரு நாள் திறக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும் சந்தையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை என நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை அடுத்து நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் தனிமனித இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்த கடைகள், இடைவெளியில் மக்கள் நிற்பதற்கு ஏதுவாக கட்டம் வரையாமல் வியாபாரம் செய்த கடைகள் என 4 கடைகளை பூட்டிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு ரூ. 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடைகளுக்கு சென்ற அதிகாரிகள், இதே நிலை தொடர்ந்தால் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 May 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  3. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  5. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  7. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  9. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  10. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?