அருப்புக்கோட்டை-படித்தது 10 ம் வகுப்பு -பார்த்தது ஆங்கில வைத்தியம்

அருப்புக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அருப்புக்கோட்டை-படித்தது 10 ம் வகுப்பு -பார்த்தது ஆங்கில வைத்தியம்
X

 சண்முகசுந்தரம்@எம்.ஏ.போஸ்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்து தாலுகா போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமம் நடுத்தெருவில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் தனியாக கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடேஷ்வரனுக்கு ஏராளமான புகார்கள் வந்தது புகாரை அடுத்து தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரன் தனது குழுவினருடன் செம்பட்டியில் சிறிய வீட்டில் இயங்கிய கிளினிக்கிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த கிளினிக்கை நடத்தி வந்தது அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும் பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.ஏ.போஸ் என பெயரை மாற்றி எம்.எஸ் படித்ததாக பெயர் பலகை வைத்து கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது மேலும் அங்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்த ஊசிகள் , பயன்படுத்தாத புதிய ஊசி மருந்துகள் ,ஸ்டெதஸ்கோப், மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்தனர்

இதனை அடுத்து தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரன் போலி மருத்துவர் சண்முக சுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் சண்முக சுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலி மருத்துவர் சண்முகசுந்தரம் கடந்த 2015 ஆம் ஆண்டு புலியூரான் கிராமத்தில் இதேபோல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 28 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  2. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
  3. கோவில்பட்டி
    கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்
  5. கோவில்பட்டி
    கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில்...
  6. காஞ்சிபுரம்
    திமுக மருத்துவஅணி சார்பில் 1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்...
  7. தஞ்சாவூர்
    இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் திருடிய மர்ம நபர்கள்
  9. தூத்துக்குடி
    கூட்டுறவு வங்கி காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி மோசடி: 3 பேர் கைது
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்