/* */

பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது வேன் மோதல்: இருவர் பலி

பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது வேன் மோதல்: இருவர் பலி
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்ன தம்பியா புரத்தைச் சேர்ந்த பாண்டி(50), செல்வி(40) இருவரும் சகோதரர்கள், இருவரும் சனிக்கிழமை காலை சின்னதம்பியாபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில்பட்டி செல்வதற்காக பெத்துரெட்டிபட்டி நான்குவழிச் சாலையில் ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து-திருநெல்வேலி நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாண்டி, செல்வி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.

தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 March 2021 3:05 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்