/* */

ஊரடங்கின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உலா

அருப்புக்கோட்டையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக...

HIGHLIGHTS

ஊரடங்கின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உலா
X

அருப்புக்கோட்டையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஊரடங்கின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு நூற்றுக்கணக்கான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உலா வந்தனர்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது முழு ஊரடங்கின் போது நண்பகல் 12 மணிக்கு மேல் மருந்துக்கடைகள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரியக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் அருப்புக்கோட்டையில் நேற்று 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஊரடங்கின் முதல் நாளிலேயே அரசின் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு இருசக்கர வாகன ஓட்டிகளும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் சாலைகளில் உலா வந்த வண்ணம் இருந்தனர்

காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கெடுபிடி இல்லாததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஊரடங்கை மதிக்காமல் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கார்கள் ஆட்டோக்கள் நகரில் சுற்றி வந்தன ஊரடங்கில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரியும் பொதுமக்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே

கொரோன பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தி கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்

Updated On: 11 May 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  2. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  3. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  5. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  6. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  7. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  8. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  9. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  10. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!